Tuesday, February 10, 2009

பெண் என்னும் உன்னதம் - 5

மனிதனுக்கு உணர்வு என்பது கரைபுரண்டு ஓடும் நதியின் ஆழம் போல, அளப்பது கடினம். நிதானங்கள் மறந்த நொடிகள் போட்டுக் கொள்ளும் முகமூடிக்கு நாம் நாகரிகமாய்ச் சூட்டிய பெயர் தான் 'உணர்வு'. காதல் முதல் காமம் வரை இங்கே அனைத்துமே அந்த முகமூடிக்குள் தான் ஒழிந்திருக்கின்றன. அதிலும் தென்றல் உரசாத மலர்கள் எவ்வளவு சொற்பமோ அவ்வளவு சொற்பம் காதலை உணராத உயிர்கள். பெண்ணுக்கும் கூட அந்த உணர்வுகள் உண்டு(?) ஆனால் அவளுடைய அந்த உணர்வுகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் தான் என்ன?

பெண்ணுக்கான காதல் என்பது தொட்டிக்குள் நீந்தும் மீன்களின் நிலைபோல தான். அவளுக்கு இங்கே வாழ்க்கைக்கான எல்லை என்பதைவிட முன்னமே வரையப்பட்ட எல்லைகளுக்குள் தான் வாழ்க்கையே. அவளால் உணர்வைக் கூட ஒரு இயல்பாய் உணரமுடிவதில்லை. அதற்கும் சாதி, மதம், குடும்ப கௌரவம் என்று இங்கே ஒராயிரம் வேலிகள். இவை அனைத்தையும் தாண்டி அவள் காதலிக்கத்துவங்கும் முன்னரே காதலை அவளுக்கு உணரவைக்கும் அந்த நொடிகள் கடந்து விடுகின்றன.

காதல் என்ற உணர்வு வார்த்தைகளால் வடிக்க முடியாத ஒரு உன்னதம், பெண்ணைப் போலவே. உலகின் மிகச்சிறந்த கவிதையை முதல் முறை வாசிக்கும் நொடியில் உண்டாகும் சிலிர்ப்பு போல, பிறந்து நொடிகளே ஆன ஒரு மழலையின் தீண்டல் போல அதற்கான உணர்வுகள் உன்னதத்தின் உச்சம், அந்த உன்னத நொடிகளை தவறவிட்டு விட்டு அவள் மனதை அவளே நொண்டிச் சாக்கு சொல்லி ஆற்றிக்கொண்டிருக்கிறாள். அந்த சாக்குகள் வேறெதும் அல்ல அந்த ஒராயிரம் வேலிகளில் ஏதோ ஒன்று. அவைகளை உடைத்திறிந்தால் காயம் பட்டுவிடுமோ என்றெண்ணி அவள் உணர்வுகளையும் உள்ளத்தையும் அவளே காயப்படுத்திக்கொண்டிருக்கிறாள்.

அவளின் காதல் வரலாறுகளை அவள் போர்வையிலும், தலையணையிலுமே எழுதுகிறாள், கண்ணீரால். அவை ஒவ்வொன்றும் அச்சிலேறாத காய‌ங்கள். அந்த நூல்வேலிகளும் அவைகளை எந்த பிரசுரத்திற்கும் விற்பதில்லை. அந்த காயங்கள் விற்பனைக்கில்லை போலும். இவைகளைத் தவிர அவள் காதலைப் பகிர்ந்து கொள்வது நிலவிடமும், நட்சத்திரங்களிடமும் தான். அவளுக்கும், நிலவுக்கும், நட்சத்திரங்களுக்கும் இடையே அமர்ந்து அந்த காயங்களுக்காக அவளோடு சேர்ந்து கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பது இரவு மட்டும் தான். இன்னும் பல பெண்கள் ஊரடங்கிப் போனபின் தாங்கள் தொலைத்துவிட்ட காதலை நினைத்து இரவோடு மௌனத்தை துணைக்கு வைத்துக் கொண்டு கண்ணீரால் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இரவு தினமும் வந்து கொண்டுதான் இருக்கிறது அவள் அதனிடம் கொடுத்துவைத்திருக்கும் தொலைந்த காதல் கதைகளைச் சுமந்து கொண்டு, அந்த மௌன நேரங்களைப் படித்துப் பாருங்கள் அவள் தொலைத்து விட்ட அந்த உன்னத உணர்வின் வலிகள் தெரியும். படித்துவிட்டு வாருங்கள் மேலும் பேசுவோம்...

3 comments:

Yes.Kay said...

oru visayam nan ketrukan mapla in arranged marriages , we know all arranged marraiges doesn't end in Love does it sound funny but its fact ,but few successfull happily arranged married pengal kitta i have asked one question ..,
Ivara kalyanathuku munadi pathurunthinga na avaru vera caste ah irunthruntha love pannirupingala nu .???.,obviously all have answered ..,yes i wud have gone for him..,but adu sutha poi da..,pacha poi da ..who knows better than me :p, yennai poruthavarai india pengalin suthandiram kakgidadil matum vaznthukondirukum oru aruvarupana ,asingamana hyku kavidai ...

Yes.Kay said...

gud post mapla

கார்த்திக் said...

i know you will get too emotional seeing this mapla