முந்தய காலங்களில் நம்மிடையே ஒரு வழக்கமிருந்தது, ஒரு பெண் பிறந்ததும் அவளோடு சேர்த்து ஒரு காளை மாட்டையும் வளர்ப்பார்கள், அது அடக்கப்படுவதற்காக வளர்க்கப்படும் இவளோ அடக்கப்பட்டே வளர்க்கப்படுவாள். அந்தப் பெண்ணுக்கு திருமண வயது வந்ததும் அந்த காளை மாட்டை அடக்குபவனுக்கே அந்த பெண்ணை மணம் முடித்துக் கொடுப்பார்கள்.
இன்று அந்த வழக்கம் நடைமுறையில் இல்லை. ஆனாலும் ஜல்லிக்கட்டு என்ற பெயரால் இன்னும் மாடுகள் எப்படி அடக்கப்பட்டு துன்புறுகிறதோ அதே போல் பெண் எனும் ஒரு உன்னதப் படைப்பு அடக்கப்பட்டு காயப்பட்டு இன்னும் நம்மிடையே தான் வாழ்கிறாள். அந்த மிருகங்களுக்கு கூட அவைகளை துன்புறுத்தாதீர்கள் என்று போரட ஒரு சிலர் இருக்க்றார்கள் ஆனால் இவளுக்கு இன்னும் கூட ஏனோ அடங்கிப் போவதும் அடிமையாய் இருப்பதும் பிறப்பின் காரணங்களாகவே கற்பிக்கப்படுகின்றன.
அந்த மாடுகள் கூட முட்டி மோதி அதை துன்புறுத்துபவரை காயப்படுத்தி அந்த போராட்டத்திலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள திமிறிக் கொண்டு ஓடுகின்றன, ஆனால் பெண்ணே நீ மட்டும் ஏனடி இன்னும் உன்னை காயப்படுத்துபவரை பூக்களால் கூட அடிக்க மறுக்கிறாய்?
ஆணும் பெண்ணும் இணைந்தாலன்றி உலகில் உயிர் என்ற ஒன்று வெறும் கற்பனையே, ஆனால் பிறந்தது முதலே அவளை ஆணுக்காக மட்டும் பிறந்த ஒரு பொருளாக பார்ப்பது சமூகம் என்ற போலி மருத்துவர் நமக்கு மாட்டி விட்ட ஓட்டைக் கண்ணாடியின் உபயம். அதை கழற்றி எறிந்து விட்டுப் பார்க்க அவளும் இன்று மறந்தே விட்டாள். அவள் என்ன செய்வாள், அப்படி பார்க்க வேண்டும் என்ற நினைப்பு கூட வராத அளவுக்கு அவளுக்கு தான் இன்னும் ஆறாத எத்தனை காயங்கள்.
தேநீர்க் கோப்பை இன்னும் என்னோடு தனியாகவே உள்ளது மேலும் பேசுவோம்......
2 comments:
U REALLY SOUND like our very own Tabu shankar ..,and i keep wondering am i reading an article from Anantha vikadan..,u will go places ..and i wnt be surprised to see that- ipadiku un mudhal Rasigan - Senthi
Thanks darling
Post a Comment