Monday, December 7, 2009

துளி



கீழே குட்டையாய்த் தேங்கியிருந்த தண்ணீர் காத்துக்கொண்டிருந்தது,
எப்பொழுது கீழே விழும் இந்தத் துளி என்று,
எங்கிருந்தோ புறப்பட்டு வந்த காற்று,
ஒரு உலுக்கு உலுக்கிச் சென்றது அந்தத் துளி பிடித்துக்கொண்டிருந்த இலைகளை,
மழைக்குக் கூட பள்ளியில் ஒதுங்காதவர் உண்டு,
ஆனால் மழை ஒதுங்கியிருக்குமா என்று தெரியவில்லை,
ஒருவேளை ஒதுங்கிருந்தால் வீசிக்கொண்டிருந்த காற்றுக்கு,
கேட்கும்படியாகவே சொல்லியிருக்கும் பாரதியின் வரிகளை,
"வீழ்வேனென்று நினைத்தாயோ"